உடுமலையில் குரூப் 2 மாதிரி தேர்வு

 

 

திருப்பூர்,மே15: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏவுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் உடுமலை எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் நடந்து வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான குருப் 2 மற்றும் 2 ஏ முதன்மை தேர்வு வருகிற அக்டோபர் 25ம் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில் மாதிரி தேர்வு உடுமலை எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று (15ம்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சுரேஷ் தெரிவித்தார்.

Related Stories: