தண்ணீர் டேங்கை சுத்தம் செய்ய வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை

 

சேலம், மே 15: சேலம் மாவட்ட மதசார்பற்ற ஜனதாதள தலைவர் வேலாயுதம், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சேலம் மாநகரில் வெயிலுக்காக தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் வைத்திருக்கின்றனர். தண்ணீர் டேங்கை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். இல்லை என்றால் தண்ணீரில் கிருமிகள் உற்பத்தியாகி காலரா, மலேரியா போன்ற நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் டேங்கை சுத்தம் செய்ய வேண்டும். சேலம் மாநகரத்தில் அதிகாலை தெருவிளக்கு எரியாத காரணத்தினால் பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய அச்சப்படுகிறார்கள். எனவே, தெருவிளக்கு அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: