தீ விபத்தில் 2 பள்ளி பஸ்கள் நாசம்

மூணாறு, மே 13: நெடுங்கண்டம் அருகே குழித்தொழு பகுதியில் நேற்று காலை 11 மணியளவில் அப்பகுதியில் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளியில் பஸ்களில் வெல்டிங் வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது, ஷெட்டில் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பஸ்கள் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கின. அங்கிருந்து கரும்புகை மற்றும் தீப்பிழம்புகள் எழுவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

பஸ்கள் பள்ளி கட்டிடத்திற்கு மிக அருகிலேயே நிறுத்தப்பட்டிருந்தாலும், தீயணைப்பு வீரர்களும் பொதுமக்களும் சமயோசிதமாகச் செயல்பட்டதால் தீ கட்டிடங்களுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது. வெல்டிங் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருந்த மின் கம்பிகளில் ஏற்பட்ட கசிவு காரணமாகத் தீப்பிடித்ததாகப் பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துப் நெடுங் கண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: