புளியங்குடியில் குடியிருப்பு பகுதியில் இயங்கும் ரேஷன் கடையால் மக்கள் அவதி

புளியங்குடி மே, 14: புளியங்குடியில் மீனாட்சி திரையரங்கம் அருகில் புளியங்குடி மேற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் ரேஷன்கடை இயங்கி வருகிறது. கட்டிட பராமரிப்பு காரணமாக வல்லப விநாயகர் கோவில் தெருவில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு குடியிருப்பு பகுதியில் தற்காலிகமாக ரேஷன் கடை இடமாற்றம் செய்யப்பட்டது.

தற்போது கட்டிட வேலை முடிந்தும் ரேஷன் கடை இடமாற்றம் செய்யப்படாமல் உள்ளது. குடியிருப்பு பகுதியில் ரேஷன் கடை இருப்பதால் தினமும் ஏராளமான பொதுமக்கள் வருவதால் சாலை முழுவதும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

Related Stories: