அருப்புக்கோட்டை, மே 14: அருப்புக்கோட்டை அரசு கலை மற்றும் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் முத்து பாண்டியன் வெளியிட்டுள்ள தகவலில், அருப்புக்கோட்டை அருகே செட்டிக்குறிச்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஏ(தமிழ்), பிஏ(ஆங்கிலம்) பிகாம், பிகாம்(சிஏ), பிஎஸ்சி (கணிதம்) ஆகிய இளநிலை பாடப்பிரிவுகள் உள்ளன.
இக்கல்லூரியில் உயர்கல்வி பயில விருப்பம் உள்ள மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டுவதற்கான சேர்க்கை உதவி மையம் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவ மாணவிகள், கல்லூரியில் சேர www.tngasa.in என்ற இணையதள வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். மாணவ மாணவிகள் கல்லூரியில் சேருவதற்கு வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
