சிவகாசி, மே 14: சிவகாசி அருகே மனைவியை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகாசி அருகே பி.பாறைப்பட்டியை சேர்ந்தவர் குருசாமி. இவருக்கு மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். குருசாமிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவரது மனைவி கேட்டபோது, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தடுக்க வந்த மகளையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தாய், மகள் இருவரும் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி, எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் குருசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
