தேனி, மே 14: பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடைகால நெல் நடவுப் பணிக்காக உழவுப்பணி தற்போது தீவிரம் அடைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம் நகர், தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் நெல் விவசாயம் நடந்து வருகிறது. ஆண்டுதோறும் கோடை காலத்திலும் இப்பகுதியில் நெல் பயிரிடுவது வழக்கம்.
இந்த ஆண்டு தற்போது கோடை சீசனில் நெல் நடவு பணிக்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். கடந்த நான்கு நாட்களாக இப்பகுதியில் கோடை மழை பெய்து வருகிறது. இதை பயன்படுத்தி விளை நிலங்களில் உழவு பணியை விவசாயிகள் துவக்கி உள்ளனர். வயல் வெளியில் தண்ணீர் நிரப்பப்பட்டு டிராக்டர் மூலம் உழவு செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
