ஆண்டிபட்டி, மே 13: க.விலக்கு முதல் வருஷநாடு செல்லும் சாலையில் திருமலாபுரம் விலக்கு அருகே ரயில்வே தண்டவாளப் பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளன. இதனால் மதியம் 1.00 மணி முதல் 3.00 மணி வரை இந்த வழியாகச் செல்லும் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு, மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட உள்ளன.
வருசநாடு நோக்கிச் செல்லும் வாகனங்கள் ஜி.கல்லுப்பட்டி – பந்துவார்பட்டி வழியாகச் செல்லலாம். மற்றொரு பாதையாக திருமலாபுரம் வழியாகவும் வாகனங்கள் தற்காலிகமாகச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் இப்பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
