×

ஊஞ்சல் விளையாடியபோது பரிதாபம் பீரோ கவிழ்ந்து சிறுமி பலி

 

 

பந்தலூர், மே 14: பந்தலூர் அருகே நெலாக்கோட்டை விலங்கூர் பகுதியை சேர்ந்தவர் டைலர் தம்பிதுரை. இவர், நேற்று மனைவியுடன் நெல்லியாளம் பகுதிக்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அவர்களுடைய மூன்று குழந்தைகள் வீட்டில் தனியாக இருந்தனர். இதனைத்தொடர்ந்து, 6ம் வகுப்பு படித்த மகள் நித்திய (11) வீட்டின் பீரோவின் கைப்பிடி மற்றும் ஜன்னல் கம்பியில் சேலை மூலம் ஊஞ்சல் கட்டி விளையாடினார். அப்போது எதிர்பாராதவிதமாக பீரோ அவர் மீது சாய்ந்தது. பீரோவுக்கு மேலே இருந்த கனமான பொருட்கள் தலையில் விழுந்தது. இதில் பீரோவுக்கு அடியில் சிக்கி படுகாயம் அடைந்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் நித்தியயை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு உடலை பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து நெலாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், எஸ்ஐ பிரேம்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Pandalur ,Tyler Thambidurai ,Vilangur ,Nelakottai ,Nellialam ,
× RELATED கோத்தகிரி நகர் பகுதியில் பஸ் பயணிகளை...