×

கோத்தகிரி நகர் பகுதியில் பஸ் பயணிகளை சாலையில் இறக்கிவிடுவதால் விபத்து அபாயம்

 

கோத்தகிரி, மே 14: கோத்தகிரி நகர் பகுதியில் உள்ள மார்க்கெட் பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், சமவெளிப்பகுதிகளில் இருந்தும் வரும் பொதுமக்கள் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளால் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்படாமல் பிரதான சாலையில் நிறுத்தி இறக்கி விடப்படுகின்றனர்.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் ஏற்படுகிறது. எனவே அரசு பேருந்துகள் மற்றும் தனியார் மினி பேருந்துகள் பேருந்து நிலையத்தில் நிறுத்தி பொதுமக்களை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.

Tags : Kotagiri Nagar ,Kotagiri ,
× RELATED கூடலூர் பேருந்து நிலையத்தில் புதிய குப்பை தொட்டிகள்