பாலக்காடு, மே 8: கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுகண்டம் மஞ்ஞப்பாறையைச் சேர்ந்த ரெஜியின் மகன் ரோஜி (17). கேட்டரிங் தொழிலாளி.
வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு காரணமாக நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் ஓட்டல்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டன. இதனால், கேட்ரிங் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து ரோஜி உட்பட 6 கேட்டரிங் தொழிலாளர்கள் உப்புத்தரா தூக்குப்பாலம் பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.
இவர்கள் பெரியாறு ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளனர்.
இதில் 6 பேருக்கும் நீச்சல் தெரியாது. இந்நிலையில் ரோஜி ஆழமான பகுதிக்கு சென்றதில் ஆற்றில் மூழ்கி மாயமானார். சக நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் மூழ்கிய ரோஜியை தேடி வந்தனர்.
அவரது உடல் நேற்றுமுன்தினம் மாலை மீட்கப்பட்டது.
பிறகு உடலை கட்டப்பனாவிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கட்டப்பனா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
