பிதர்காடு சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் கிராம மக்கள் கடும் பாதிப்பு

 

பந்தலூர், மே 8: பந்தலூர் அருகே பிதர்காடு பகுதிகளில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பிதர்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கைவட்டா, பதினெட்டுகுன்னு, முக்கட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பள்ளி மாணவர்கள் படிக்க முடியாமல் பாதிப்பதாகவும், வீட்டு உபயோகப் பொருட்களான மின்மோட்டார்கள், டிவி, குளிர்சாதனப்பெட்டிகள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். எனவே மின்வாரியத்தினர் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு சீரான மின் விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: