பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிந்தது

சத்தியமங்கலம், மே 6: தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தப்படியாக 2வது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரம் வரை நீர்த்தேக்கும் கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வடக்கு கேரளாவில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்துள்ளது. அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நேற்று நீர்வரத்து 86 கன அடியாக இருந்தது.

அதே சமயம் அணையில் இருந்து பவானி ஆற்றில் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்காக 800 கன அடி தண்ணீரும், குடிநீர் தேவைக்காக 200 கன அடி தண்ணீரும், என மொத்தம் 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ள நிலையில் அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றம் அதிகரிப்பால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 61.02 அடியாகவும், நீர் இருப்பு 7.58 டிஎம்சி ஆகவும் இருந்தது.

 

 

Related Stories: