திருப்பூர், மே 1: திருப்பூர் பெரியாண்டிப்பாளையம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (40). இவர் அப்பகுதியில் பேக்கரி வைத்து நடத்தி வந்தார். கடந்த நவம்பர் 18ம் தேதியன்று நள்ளிரவில் இவரது பேக்கரியின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்,அங்கிருந்து ரூ.4 ஆயிரம் மற்றும் செல்போனை திருடி சென்றார்.
இது குறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து, உதயா (29) என்பவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடைபெற்றது. நேற்று முன் தினம் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. உதயாவுக்கு ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.200 அபராதம் விதித்து மாஜிஸ்திரேட்டு நதியா பாத்திமா தீர்ப்பளித்தார்.
