நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது

செய்யாறு, மே 5: செய்யாறு அடுத்த ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தம்மாள் (57), இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது 2 இளைஞர்கள் உள்ளே நுழைந்து முத்தம்மாளின் முகத்தில் தலையணியைப் பொத்தி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றனர். முத்தம்மாள் கூச்சல் போடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து நகை பறிக்க முயன்ற ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் (19) என்பவரை பிடித்து தூசி போலீசில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய அதே கிராமத்தைச் சேர்ந்த கோபால் சாமியை தேடி வருகின்றனர்.

Related Stories: