மாஜி ராணுவ வீரர் உட்பட 6 பேரை கொக்கியால் தாக்கிய தொழிலாளி கைது குலதெய்வ வழிபாட்டிற்கு சென்றபோது

ஆரணி, ஏப்.30: ஆரணி அடுத்த கொங்கராம்பட்டு கிராமம் ஆற்காடு ரோட்டு தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(42), முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சூர்யா. இவர்களது மகன் அரிஷ். கடந்த 26ம் தேதி சுரேஷ், களம்பூர் அடுத்த ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள குலதெய்வமான கன்னியம்மன் கோயிலில் ஆடு பலியிட்டு தனது வேண்டுதலை நிறைவேற்ற குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சென்றார்.
அப்போது, கோயில் அருகே களம்பூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மணிகண்டன், மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு, சொந்தமான நிலத்தின் அருகே ஆட்டை கட்டி வைத்தார். அப்போது, மணிகண்டனின் நாய் ஆட்டை விரட்டி கடிக்க சென்றுள்ளது.

இதனால், சுரேஷ் நாயை தூரத்திவிட்டுள்ளார் அப்போது, அங்கு வந்த மணிகண்டனின் மனைவி பாரதி, எதற்காக எனது குழந்தையை விரட்டுகிறாய் என கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த மணிகண்டன், பாரதி மற்றும் மணிகண்டனின் தனது கையில் வைத்திருந்த மூட்டை தூக்கும் இரும்பு கொக்கியால் சுரேஷின் தலை, உடலில் குத்தி கிழித்து தாக்கியுள்ளார். அப்போது, தடுக்க வந்த சூர்யா, அரிஷ், உறவினர்கள் அணிதா, ரவி, வெங்கடேசன் ஆகியோரையும் மணிகண்டன் அவரது நண்பர் ஆகியோர் இரும்பு கொக்கியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதில், படுகாயமடைந்து மயங்கிய அவர்களை, அங்கிருந்தவர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுரேஷ், களம்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மணிகண்டனின் மனைவி பாரதி, அவரது நண்பர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: