ஏப்.29க்கு பிறகு ஜாக்கிரதை பெட்ரோல், டீசல் விலை உயரப்போகிறது: ராகுல்காந்தி எச்சரிக்கை

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயரப்போவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எச்சரித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: தேர்தல் பணிகள் முடிந்தது, பணவீக்கத்தின் வெப்பம் வரவிருக்கிறது. ஏப்ரல் 29ஆம் தேதிக்குப் பிறகு, ஜாக்கிரதை.

பெட்ரோல், டீசல், எல்லாமே விலை உயரும். எண்ணெய் விலை மலிவாக இருந்தபோது, ​​மோடி அரசு லாபத்தை அள்ளிக்கொண்டது. இப்போது விலை உயர்ந்திருப்பதால், அந்தச் சுமையை உங்கள் மீது சுமத்தும். விலை மலிவாக இருக்கும்போது கொள்ளையடிக்கும் ஒரு அரசு – பணவீக்கத்தின் முழுச் சுமையையும் மக்கள் மீது சுமத்துகிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: