மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் விளக்கம் கேட்டு கடிதம்

 

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனித் தொகுதிக்குட்பட்ட வடக்கு அச்சம் தவிர்த்தான் கிராமத்தை ‘பரச்சேரி’ என்று பதிவாகி இருப்பதை நீக்காதது குறித்து மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு (மாவட்ட ஆட்சியர்) தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். பெயர் மாற்றம் செய்யப்படாததால், 23.04.2026ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். சாதிப்பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று அரசாணை வெளியிட்டும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை

Related Stories: