முடிவை மாற்றியது அமெரிக்கா ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை நீட்டித்தது: மே 16 வரை வாங்கலாம்

வாஷிங்டன்: ஈரான் போரைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 5ம் தேதி ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கான தடையிலிருந்து இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு அளித்தது. அடுத்த சில நாட்களில் இந்த தடை விலக்கு வேறு பல நாடுகளுக்கும் நீட்டிக்கப்பட்டது. இந்த விலக்கு கடந்த 11ம் தேதியுடன் முடிவடைந்தது. அமெரிக்கா தடையை விலக்கிக் கொண்டதால், ஏற்கனவே கடலில் தயாராக இருந்த ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா பெருமளவில் வாங்கியது. கடந்த ஒரு மாதத்தில் வழக்கமான கொள்முதலை விட 3 மடங்கு அதிகமான ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்கியது.

இந்த தடை விலக்கு மீண்டும் நீட்டிக்கப்படாது என அமெரிக்கா சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தது. ஆனால் திடீரென தனது முடிவை மாற்றி, மே 16ம் தேதி வரை ரஷ்ய எண்ணெய்க்கான தடை விலக்கு நீடிக்கும் என அமெரிக்க கருவூலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு ஏப்ரல் 17ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஒருமாத தடை விலக்கு மூலம், கப்பல்களில் ஏற்கனவே ஏற்றபட்டிருந்த 14 கோடி பீப்பாய் ரஷ்ய எண்ணெய் உலக சந்தைக்கு கிடைத்ததன் மூலம், கச்சா எண்ணெய் விலை உயர்வு கட்டுப்படுத்த உதவியதாக அமெரிக்கா கூறி உள்ளது.

Related Stories: