லெபனானில் ஐநா அமைதி காக்கும் படையினர் மீது தாக்குதல்: வீரர் பலி

பாரிஸ்: லெபனானில் ஐநா பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்தார். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்தனர். இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தி வந்தது. அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து இஸ்ரேல் லெபனான் இடையே 10 நாள்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் லெபனானில் உள்ள ஐநா அமைதி காக்கும் படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் தன் எக்ஸ் பதிவில், “லெபனானின் காண்டூரியா கிராமத்துக்கு அருகே சாலைகளில் இருந்த வெடிபொருள்களை அகற்றும் பணியில் ஐநா அமைதி காக்கும் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பிரான்ஸ் ராணுவத்தின் 17வது பாராசூட் பொறியாளர் படை பிரிவை சேர்ந்த சார்ஜென்ட் மேஜர் ஃப்ளோரியன் மான்டோரியா உயிரிழந்தார். மேலும் 3 பிரான்ஸ் வீரர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பினரே காரணம். தாக்குதல் நடத்தியவர்களை லெபனான் அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories: