பீகார் பாஜ மாஜி தலைவர் தனி கட்சி தொடங்க முடிவு

புதுடெல்லி: பீகாரில் பாஜவின் முன்னாள் தலைவரான ஆர்கே சிங் தனியாக சொந்த அரசியல் கட்சியை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரியான ஆர்கே சிங் அரசியலில் சேர்வதற்கு முன்னதாக உள்துறை செயலாளராக பதவி வகித்தார். பின்னர் மோடி அரசில் ஒன்றிய அமைச்சராகவும் பதவி வகித்தார். அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கடந்த 2014ம் ஆண்டு பாஜவில் இணைந்த ஆர்கே சிங், கடந்த ஆண்டு நவம்பரில் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பாஜவில் இருந்து அவர் விலகினார். இந்நிலையில் பாஜவின் முன்னாள் தலைவரான ஆர்கே சிங் புதிதாக கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். செய்தி நிறுவனத்துக்கு ஆர்கே சிங் அளித்த பேட்டியில்,” நான் வெளிப்படையாக பேசி வந்ததாலேயே பாஜ என்னை இடைநீக்கம் செய்தது. நான் புதிய கட்சியை தொடங்குவதற்கு முடிவு செய்து இருக்கிறேன். இந்த கட்சி நேர்மையான கல்வி, அறிவு பெற்ற மற்றும் சாதிபேதமற்ற தனிநபர்களை ஒருங்கிணைக்கும்” என்றார்.

Related Stories: