கோபி நகராட்சி பகுதியில் 36 இடங்களில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

கோபி, ஏப். 12: கோபி சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி.பிரபு கடந்த சில நாட்களாக தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, நேற்று கோபி நகராட்சிக்குட்பட்ட கரட்டூர் மாரியம்மன் கோயிலில் பிரச்சாரத்தை தொடங்கிய வி.பி.பிரபு, ஜே.ஜே.நகர், நாய்க்கன்காடு, ஜோதி நகர், முத்து நகர், பார்வதி நகர், கமலா ரைஸ் மில் வீதி, மேட்டுவலுவு, கபிலர் வீதி, பெருமாள் சாமி நகர், மல்லிகை நகர் கோடீஸ்வரா நகர் உள்ளிட்ட 36 இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரிப்பின் போது, கோபி நகருக்கு மேம்பாலம் அமைத்து தருதல், தொகுதி வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், புறவழிச்சாலை அமைத்தல், கோபியை தனி மாவட்டமாக அறிவித்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது, தொகுதி பொறுப்பாளரும், முன்னாள் எம்.பியுமான சிவசாமி, மாவட்ட ஜெ.பேரவை இணைச்செயலாளர் சசிபிரபு, கொள்கை பரப்பு துணைச்செயலாளர் கோபி காளிதாஸ், நகர செயலாளர் பிரினியோ கணேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

 

Related Stories: