தந்தை இறந்த விரக்தி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

 

 

ஈரோடு,ஏப்.6:அம்மாபேட்டை அடுத்த குருவரெட்டியூரை சேர்ந்தவர் அருள்மொழி. இவரது கணவர் ராமசாமி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில், இவரது மகள் சரண்யாவிற்கு (22), அடிக்கடி தனது தந்தை ராமசாமியின் ஞாபகம் வருவதாகவும், தானும் தந்தை சென்ற இடத்திற்கே செல்கிறேன் எனவும் கூறி வந்துள்ளார். இதனால் உறவினர்கள் சரண்யாவிற்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரண்யா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து அவரது அம்மா அருள்மொழி அளித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோன்று சிவகிரி அடுத்த கனக்கம்பாளையத்தை சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது மகன் அசோக் (21). கூலித்தொழிலாளியான அவர், மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். கடந்த 3ம் தேதி மதுபோதையில் வந்த அசோக்கை,மாரியம்மாள் கண்டித்துள்ளார். இதனால் அதிருப்தியடைந்த அசோக், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories: