ஈரோடு, ஏப்.13: ஈரோடு கைகாட்டி வலசு பாரதி கார்டன் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (51). எலக்ட்ரீசியன். இவரது மனைவி கோமதி, ஆடிட்டராக வேலை பார்த்து வருகிறார். மகன் சச்சின், ஐஐடி கல்லூரியில் படித்து வருகிறார். கருப்புசாமி நேற்று முன்தினம் ஈரோடு வைராபாளையத்தில் உள்ள பிளீச்சிங் பட்டறையில் வேலைக்கு சென்றார்.அப்போது, அங்கு பணியின்போது மின்சாரம் தாக்கி கருப்புசாமி தூக்கிவீசப்பட்டார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் கருப்புசாமியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் கருப்புசாமி உயரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு; மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
- ஈரோடு
- கருப்புசாமி
- பாரதி தோட்டம்
- கைகாட்டி வலசு, ஈரோடு
- கோமதி
- சச்சின்
- ஐஐடி கல்லூரி
- வைரபாளையம், ஈரோடு…
