மொடக்குறிச்சி, ஏப்.12: சிவகிரி விற்பனை கூடத்தில் 113 டன் ரூ.1.64 கோடிக்கு எள் ஏலம் நடந்தது. சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று எள் ஏலம் நடந்தது. ஏலத்திற்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1519 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில், கருப்பு ரகம் குறைந்தபட்சமாக கிலோ ரூ.114.62க்கும், அதிகபட்சமாக ரூ.172.90க்கும், சராசரியாக ரூ.147க்கும், சிவப்பு ரகம் கிலோ குறைந்தபட்சமாக ரூ.95.62க்கும், அதிகபட்சமாகரூ.143க்கும், சராசரியாக ரூ.132க்கும், வெள்ளை ரகம் குறைந்தபட்சமாக ரூ.130க்கும், அதிகபட்சமாக ரூ.138.00க்கும், சராசரியாக ரூ.134.90க்கு ஏலம் போனது. மொத்தம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 752 கிலோ (113 டன்) எள் ரூ.1 கோடியே 64 லட்சத்து 98 ஆயிரத்து 885 ரூபாய்க்கு விற்பனையானது.
