ஈரோடு, ஏப்.12: பெருந்துறை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி (55). இவர் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் இரவு நேர வாட்ச் மேனாக இருந்து வந்துள்ளார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான அவர், கடந்த 3 நாட்களாக மது அருந்தி விட்டு, பெருந்துறை வாரச்சந்தையில் படுத்துள்ளார்.
அவரை வீட்டிற்கு அழைத்து வந்த உறவினர்கள், வேலுசாமியை கண்டித்துள்ளனர். மேலும், தொடர்ந்து மது அருந்தியதால், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், வேலுசாமி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரித்தனர்.
