துவரங்குறிச்சி, ஏப். 12: துவரங்குறிச்சி- மணப்பாறை பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துவரங்குறிச்சி பகுதியில் வரும் 23ம்தேதி சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு துவரங்குறிச்சி பகுதியில் வாகனங்களில் சென்று வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொண்டு செல்கின்றனரா அல்லது பரிசு பொருட்கள் கொண்டு செல்கின்றனரா என்ற அடிப்படையில் துவரங்குறிச்சி-மணப்பாறை சாலையில் செல்லக்கூடிய இரண்டு மற்றும் நான்கு சக்கர ேதர்தல் பறக்கும் படையினர் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். இன்னும் தேர்தலுக்கு குறுகிய நாட்களே உள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
