லால்குடியில் வட்ட சமரச மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

லால்குடி, ஏப். 10: லால்குடியில் வட்ட சமரச மையத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. திருச்சி மாவட்டம், லால்குடி வட்ட சமரச மையத்தின் சார்பில் சமரச விழிப்புணர்வு பேரணி லால்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலிருந்து தொடங்கி லால்குடி புறநகர் பேருந்து நிலையம் வழியாக சென்று நீதிமன்றத்தில் முடிவடைந்தது.

லால்குடி சார்பு நீதிபதியும் வட்ட சமரச மையத்தின் தலைவருமான மோகனா வழிகாட்டுதல்படி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரகதீஸ்வரன் தலைமையில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கோபால அரசி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அருணாச்சலம் ஆகியோர் முன்னிலையில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் லால்குடி வட்ட சமரச மையத்தின் சமரசர்கள், வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர், செயலாளர், வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள், நீதிமன்ற பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள், போலீசார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

Related Stories: