திருவெறும்பூர் தொகுதியில் திமுக தேர்தல் பணிமனை திறப்பு

திருவெறும்பூர், ஏப்.5: திருவெறும்பூர் தொகுதியில் திமுக தேர்தல் பணிமனை அலுவலகத்தை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார். திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற திமுக கூட்டணி வேட்பாளர் அன்பில் மகேஷ் காட்டூர் அம்மன் நகர் பகுதியில் முனீஸ்வரன் கோயில் அருகே தேர்தல் பணிமனை அலுவலகத்தை கழக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு நேற்று திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் மாநகர கழக செயலாளர் மதிவாணன், மணப்பாறை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அப்துல்சமது, தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், வண்ணை அரங்கநாதன், மாநில அணி நிர்வாகி செந்தில், பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ், சிவக்குமார், விஜயகுமார், நகரகழக செயலாளர் காயாம்பு, ஒன்றிய கழக செயலாளர்கள் கருணாநிதி, கங்காதரன், பேரூர் கழகச் செயலாளர் தங்கவேல், பெல் தொ.மு.ச பொதுச் செயலாளர் தீபன், உட்பட அணி அமைப்பாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: