வளநாடு அருகே கார் மோதி முதியவர் சாவு

துவரங்குறிச்சி, ஏப்.12: வளநாடு அருகே கார் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருச்சி மாவட்டம் வளநாடு அருகே உள்ள தாதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(70). இவர் நேற்று தனது டூவீலருக்கு பெட்ரோல் நிரப்ப திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனை கடக்க முயன்றார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பேச்சியப்பன் என்பவர் சமயபுரம் செல்ல காரில் சென்று கொண்டிருந்தார்.

அந்த காப் எதிர்பாராத விதமாக சுப்பிரமணியன் டூவீலரில் மோதியது. இதில் சுப்ரமணியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: