மணப்பாறை, ஏப். 13: மணப்பாறையில் வாக்களர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரமாக நடக்கிறது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 23ம்தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பூத் சிலிப் அளிக்கும் பணியியனை நேற்று வருவாய்த்துறையினர் தொடங்கியுள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பொதுத்தேர்தலுக்கான பூத் சிலிப் விநியோகம் வருவாய்த்துறை சார்பில் நடந்து வருகிறது. வாக்காளர்களின் வீடு வீடாக சென்று பூத் சிலிப் விநியோகம் நடைபெற்று வருகிறது. மேலும் வயது முதிர்ந்தவர்கள் தபால் ஓட்டு அளிக்கும் நபர்களுக்கும் பூத் சிலிப் நேரடியாக சென்று வழங்கப்பட்டது.
