வழிப்பறி வழக்கில் கைதான 2 ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது

திருச்சி, ஏப். 10: திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த வழிப்பறி வழக்கில் கைதான 2 ரவடிகள் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. திருச்சி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி(30). என்பவர் மார்ச்24ம்தேதி திருவெறும்பூர் ஐடிஐ அருகே தனது நண்பர்களை பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது திருவெறும்பூர் காவல்நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளான வடக்கு காட்டூரைச் சேர்ந்த கோபால் (30), ராஜாமுகமது(30) ஆகியோர், பாலாஜியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 பணத்தை பறித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து கோபால், ராஜாமுகமது ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்நிலையில் சிறையில் இருந்து வரும் இருவரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி எஸ்பி செல்வநாகரத்தினம் பரிந்துரையின் பேரில், திருச்சி மாவட்ட கலெக்டர் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு நேற்று சிறையில் உள்ள இருவரிடமும் சார்வு செய்யப்பட்டது. மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2026 முதல் தற்போதுவரை மொத்தம் 41 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்களிடம் சார்வு செய்யப்பட்டு உள்ளது.

 

 

Related Stories: