மணிப்பூரில் 3 தீவிரவாதிகள் கைது

இம்பால்: மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள யும்னம் பட்லூ மாமாங் லைகாய் என்ற இடத்தில் தங்கஜாம் யீபாபா மெய்டேய்(32), குரை அரம்பம் பகுதியில் லைடோஞ்சம் ரமாகந்தா(35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள டோங்யாங் மாயாய் லைகாய் என்ற இடத்தில் தோங்கம் ஹெரோஜித்(39) என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் மூன்று பேரும் தடை செய்யப்பட்ட காங்கிலிபக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்தியா மியான்மர் எல்லையருகே உள்ள தங்னவுபால் மாவட்டத்தில் உள்ள மோரே காவல்நிலைய பகுதியின் யாங்கூபுங் என்ற கிராமத்தில் ஒரு ஏகே-47 ரக இயந்திர துப்பாக்கி, இரண்டு 9மிமீ பிஸ்டல்கள், 16 கண்ணிவெடிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: