விஜய் ரோடுஷோ புதுவை போலீஸ் வழக்குப்பதிவு

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் நேற்று முன்தினம் அனுமதியின்றி சுமார் 20 கி.மீ ரோடு ஷோ நடத்தினார். அப்போது, அவரது ரசிகர்கள் அத்துமீறலில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சாலையை மறித்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தட்டாஞ்சாவடி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அன்பரசன், தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புதியவன் மீது கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி வாங்கிய விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி புதியவன் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Related Stories: