புதுச்சேரியில் இருந்து நாளை முதல் 3ம் கட்டமாக மு.க.ஸ்டாலின் பிரசாரம்

சென்னை: சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மூன்றாம் கட்டமாக புதுச்சேரி மாநிலத்தில் இருந்து திமுக தலைவர், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நாளை முதல் பிரசாரம் மேற்கொள்கிறார். மார்ச் 31ம் தேதி திருவாரூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் தொடங்கினார். மூன்றாம் கட்ட பரப்புரையை நாளை புதுச்சேரியில் தொடங்குகிறார்.

நாளை, திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு புதுச்சேரி மாநிலத்திலும், 7ம் தேதி செவ்வாய்கிழமை காலை 9 மணிக்கு கடலூரில் பொதுக்கூட்டம், திட்டக்குடி, விருத்தாச்சலம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, கடலூர், நெய்வேலி, புவனகிரி, காட்டுமன்னார் கோவில், சிதரம்பம் தொகுதியிலும், மாலை 5 மணிக்கு நாகப்பட்டினம் பொதுக்கூட்டத்தில் நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் தொகுதியிலும், 8ம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு சீர்காழி பொதுக்கூட்டத்தில், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் தொகுதியிலும், விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், செஞ்சி, மயிலம் தொகுதியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

மேலும் 9ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு திருவண்ணாமலை பொதுக்கூட்டத்தில் உளுந்தூர் பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, செங்கம், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி தொகுதியிலும், மாலை 5 மணிக்கு மறைமலைநகர் பொதுக்கூட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், தாம்பரம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

Related Stories: