ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் ரூ.9.5 கோடி மதிப்புள்ள நகைகளை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தது. திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ராஜா 18 பெட்டிகளில் தங்கம், வைரம், வெள்ளி பொருட்களைக் கொண்டு வந்துள்ளார். உரிய ஆவணம் இல்லாததால் நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.9.5 கோடி மதிப்புள்ள நகைகள் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
