ஓசூர் அருகே மீண்டும் மீண்டும் கள்ளக்காதலனுடன் பள்ளி ஆசிரியை ஓடியதால் பரபரப்பு

ஓசூர்: ஓசூர் அருகே கள்ளக்காதலனுடன் பள்ளி ஆசிரியை மாயமானது தொடர்பாகவும் செல்போனில் குழந்தையின் ஆபாச படங்கள் இருந்ததா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 30 வயது இன்ஜினியர், பெங்களூருவை சேர்ந்த 24 வயதுடைய உறவுக்கார பெண் ஒருவரை காதலித்து கடந்த 2018ல் திருமணம் செய்து கொண்டார். இவாகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் உள்ள விவசாய உரங்கள் விற்பனை செய்யும் கடையில் இன்ஜினியர், கூலி வேலை செய்து வந்தார். அவரது மனைவி, அந்த பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்கள் குடும்பமாக அந்த பகுதியில் தங்கியிருந்தனர்.

இவர்கள் தங்கியிருந்த இடத்தின் அருகில் திருப்பத்தூர் மாவட்டம் கரூரை சேர்ந்த குறளரசன் (25) என்பவர் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் குறளரசனுக்கும், இன்ஜினியர் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டடு தகாத உறவாக மாறியதாக கூறப்படுகிறது. கடந்த 8 மாதங்களுக்கு முன், மனைவியின் தகாத உறவு விவகாரத்தை அறிந்த இன்ஜினியர், அவரை கண்டித்தார். இந்நிலையில் டிசம்பர் மாதம், தனது 2 குழந்தைகளுடன் இன்ஜினியரின் மனைவி மாயமானார்.

இதுகுறித்து இன்ஜினியர், சூளகிரி போலீசில் புகார் செய்தார். விசாரணையில் அவர், குறளரசனுடன் சென்றிருப்பது தெரிந்தது. பின்னர் கோவையில் இருந்த இன்ஜினியரின் மனைவி மற்றும் 2 குழந்தைகளை போலீசார் மீட்டனர். குறளரசன் தப்பி ஓடி விட்டார். பின்னர் போலீஸ் முன்பு எழுதிகொடுத்த இன்ஜினியரின் மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு கணவருடன் சென்றார். இந்நிலையில் குறளரசன் மீண்டும் இன்ஜினியர் மனைவியிடம் தொடர்பு கொண்டு பேசி வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் 2 குழந்தைகளுடன் இன்ஜினியரின் மனைவி மாயமானார்.

இதுபற்றி இன்ஜினியர், ஓசூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது மனைவி மீண்டும் 2 குழந்தைகளுடன் மாயமானது குறித்தும், மேலும் தனது 6 வயது பெண் குழந்தையின் நிர்வாண படங்கள், மனைவியின் செல்போனில் இருந்ததாகவும், அதுபற்றியும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குறளரசன் மற்றும் இன்ஜினியரின் மனைவி, குழந்தைகள் ஆகியோர் எங்கு உள்ளனர் எனவும், செல்போனில் குழந்தையின் நிர்வாண படங்கள் இருந்ததா? எனவும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: