சென்னை: தமிழகத்தில் பிரியாணிக்காக இந்துக்கள், கிறிஸ்தவர்கள் காத்திருப்பதாக ஆதவ் அர்ஜூனா கிண்டலாக தெரிவித்தார். சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் த.வெ.க சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் த.வெ.க பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜுனா, பிறை தெரிந்திருப்பது மகிழ்ச்சி. கிறிஸ்தவர்கள், இந்துக்கள் அனைவரும் ரமலான் பிரியாணிக்காக காத்திருக்கிறோம் என்றார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, இஸ்லாமியர்களுடைய விரதம் முடிந்து பிறை தெரிந்து ஒளிவட்டம் வந்துள்ளது. அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் ரமலான் வாழ்த்துகள் என்றார்.
