சென்னை: உபியில் மகப்பேறு இறப்பு விகிதத்தைக் குறைக்க தீர்வு காண, தமிழ்நாடு வந்துள்ள அம்மாநில திட்டக் குழுவினர் இங்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள், நடைமுறைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தனர். மேலும் மதுரை, விருதுநகர் மாவட்ட மருத்துவமனைகளில் கள ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் எக்ஸ் தள பதிவு: ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளும் இந்த ஆரோக்கியமான போக்கு மென்மேலும் வளர வேண்டும் என விழைகிறேன். தமிழ்நாட்டுக்கு வந்துள்ள விருந்தினர்களை நம் மக்களின் சார்பாக அன்போடு வரவேற்கிறேன். மகப்பேறு இறப்பு விகிதம் குறைப்பதில் மட்டுமல்ல; மாநில சுயாட்சி, மொழிக்கொள்கை, சமூகநீதி ஆகியவற்றிலும் தமிழ்நாட்டின் திராவிட மாடல், நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால் இந்தியா இன்னும் விரைவாக வளர்வது உறுதி.
