சி.வி.சண்முகம் ஆபாச பேச்சு; எஸ்டிபிஐ மகளிரணி கடும் கண்டனம்

 

சென்னை: எஸ்டிபிஐ கட்சி மகளிரணி மாநில தலைவர் கே.பாத்திமா கனி நேற்று வெளியிட்ட அறிக்கை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பெண்கள் குறித்து வெளியிட்டுள்ள அவமதிப்பான மற்றும் இழிவான கருத்துகளை கண்டிக்கிறோம்.

நடிகை என்பதற்காக அவரைஅவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இது பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் பாதிக்கும் செயலாகும். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்து வரும் “கனவு திட்டம்” என்பது மாணவர்களின் முன்னேற்றம், மக்களின் முன்னேற்றம், கல்வி ஆகியவற்றை வலுப்படுத்தும் வளர்ச்சிக்கான திட்டங்கள். இத்தகைய உன்னதமான திட்டங்களை இழிவுபடுத்தும் விதமாக கருத்துகள் வெளியிட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

எனவே, இத்தகைய கருத்துகளை வெளியிட்டவர்கள் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும். எதிர்காலத்தில் பெண்களை அவமதிக்கும் அரசியல் முறைகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: