கூட்டணி பேச்சுவார்த்தை அடுத்த 4 நாட்களில் எந்தவித பிரச்னையும் இல்லாமல் முடிந்துவிடும்: டிடிவி.தினகரன் பேட்டி

 

சென்னை: அமமுக தலைவர் டிடிவி.தினகரன் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: இபிஎஸ் டெல்லி சென்ற நிலையில் நான் செல்கிறேன். எனக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாகவே அழைப்பு வந்தது. டெல்லியில் உள்துறை அமைச்சர் மற்ற பாஜ தலைவர்களை சந்தித்து பேசுகிறேன். கூட்டணி பேச்சுவார்த்தை எல்லாம் இபிஎஸ் கூறியது போல், அடுத்த நான்கு நாட்களில் சுமுகமாக, எந்தவித பிரச்னையும் இல்லாமல் முடிவடைந்து விடும். இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே பாமக தலைவர் அன்புமணி நேற்று ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.

Related Stories: