புதுச்சேரி முதலமைச்சரின் 2 தொகுதி ஃபார்முலா.. தட்டாஞ்சாவடி , மங்கலம் தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி!!

புதுவை : புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இரு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். புதுவையில் வருகிற ஏப்ரல் 9ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 16ம் தேதி தொடங்கிய நிலையில் மார்ச் 23 கடைசி நாளாகும்.ஆனால், புதுவையில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றன.அதேபோல என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி இறுதியாகாமல் உள்ளது. இந்நிலையில் புதுவையில் மங்களம், தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட முதல்வர் ரங்கசாமி முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் என இரு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

புதுச்சேரி முதலமைச்சரின் 2 தொகுதி ஃபார்முலா

*காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 2011 ஆம் ஆண்டு பிப். மாதத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை துவங்கினார் ரங்கசாமி.

*2011ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து கதிர்காமம், இந்திரா நகர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சரானார்.

*2016ல் தட்டாஞ்சாவடி ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட்டு எதிர்கட்சி தலைவரானார்.

*2021ல் தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் தொகுதிகள் போட்டியிட்டு, ஏனாமில் தோற்றாலும் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

*2026 சட்டமன்றத் தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

Related Stories: