‘காஸ் தட்டுப்பாடு ஆலோசனை வேணும்னா முதல்வர்கிட்ட கேளுங்க…’

காஸ் தட்டுப்பாடு போக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட திமுக மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி அளித்த பேட்டி: தமிழ்நாட்டை முழுவதுமாக ஒன்றிய அரசு புறக்கணிப்பதை அடித்தட்டு மக்கள் நன்கு புரிந்து கொண்டு இருக்கின்றனர். காஸ் கிடைக்குமா அல்லது கிடைக்காதா? என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

ஆனால், பொதுமக்களிடம் ஒன்றிய அரசு எந்தவித நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை. தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு எந்த விதமான உதவியும் செய்யவில்லை. தமிழ்நாடு செலுத்தும் வரியில்கூட, நியாயமான பங்கை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை. காஸ் தட்டுப்பாடால் பெண்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்த பிரச்னைக்கு உரிய ஆலோசனை தேவைப்பட்டால், மு.க.ஸ்டாலினிடம் ஒன்றிய அரசு கேட்கலாம். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: