பெரம்பலூர் வேப்பந்தட்டையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ1.10 லட்சம் பறிமுதல்!

 

பெரம்பலூர்: பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பந்தட்டையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ1.10 லட்சம் நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். தேர்தல் நடத்தும் அலுவலரான வருவாய் கோட்டாட்சியர் அனிதா விடம் ஒப்படைத்தனர்.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நான்ரோடு பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ2 லட்சத்தை நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். தேர்தல் நடத்தும் அலுவலரான வருவாய் கோட்டாட்சியர் அனிதா விடம் ஒப்படைத்தனர். மொத்த 3.10லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

Related Stories: