2021ல் வறட்சி… இப்போ சரியாகிடுச்சி… தண்ணியா வாரி இறைப்போம்… நல்லா அறுவடை செய்ங்க… பணத்தை கொட்ட ஆர்பி.உதயகுமார் ரெடியாம்…

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் அதிமுக நிர்வாகிகள், பாகமுகவர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: தேர்தல் நேரத்தில் பல்வேறு வதந்திகளை பரப்புவார்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கள பணியாற்றவேண்டும். எல்லாம் தயாராக உள்ளது. தேவையான தண்ணீரை நாங்கள் உங்களுக்கு தருகிறோம்.

நீங்கள் வாய்க்காலை முறையாக தூர்வாரி கொடுக்கின்ற தண்ணீரை மிகவும் சரியாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். வாய்க்காலை முறையாக தூர்வாரவில்லை என்றால் அது உடைந்து தண்ணீர் வெளியே சென்று விளைச்சலுக்கு பயன்படாமல் போய்விடும். போன தேர்தலுக்கு ஏன் தண்ணீர் திறந்து விடவில்லை என நீங்கள் கேட்கலாம். போன முறை வறட்சியாக போய்விட்டது. அதனால் திறந்து விட முடியவில்லை. இந்த ஆண்டு நிலைமை சரியாகிவிட்டது. இந்த தடவை வறட்சி கிடையாது. இந்தமுறை விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் நூறு சதவீதம் திறந்து விடப்படும்.

அதிகமாக தண்ணீர் விட்டால் பயிர்கள் அழுகிவிடும். என்ன தேவையோ அந்த தேவைக்காக மட்டுமே தண்ணீர் திறந்துவிடுவோம். நான் பேசுவது ஊடகங்களில் எப்படி வெளியாகும் என தெரியாது. அப்போது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்னை அழைத்து கவனமாக பேச வேண்டாமா என சாடுவார். அதனால் என்னால் முழுமையாக உங்களிடம் விவரிக்க முடியாது. இவ்வாறு பேசினார். வரும் தேர்தலில் தாராளமாக பணப்பட்டுவாடா செய்வதை சூசகமாக தங்களிடம் ஆர்பி.உதயகுமார் கூறியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: