தோட்டக்கலை பணியாளர்களின் போராட்டம் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் செடி நடவு பணிகள் பாதிப்பு

 

ஊட்டி, மார்ச் 13: தோட்டக்கலை பணியாளர்களின் போராட்டம் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் நடவு பணிகள், பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரிக்கு ஆண்டுக்கு 25 லட்சத்திற்கும் மேல் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். குறிப்பாக கோடை சீசன் சமயமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை பன்மடங்கு அதிகரிக்கும். கோடை சீசன் சமயத்தில் வருபவர்களை மகிழ்விக்க அரசு தாவரவியல் பூங்கா உட்பட பூங்காக்களில் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: