தேர்தல் நெருங்கிய நிலையில் மத்திய ரிசர்வ் படை போலீசார் அணிவகுப்பு

 

ஊட்டி, மார்ச் 13: தேர்தல் நெருங்கிய நிலையில் ஊட்டியில் மத்திய ரிசர்வ் படை போலீசாரின் அணிவகுப்பு நடந்தது. பொதுவாக, சட்டமன்றத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலின் போது பாதுகாப்பு பணிகள், பணம் பட்டுவாடா தடுப்பு பணிகள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு பணிகள், வாக்குச்சாவடி பாதுகாப்பு பணிகளில் உள்ளூர் போலீசார் மட்டுமின்றி துணை ராணுவம் மற்றும் மத்திய ரிசர்வ் படை போலீசார் ஈடுபடுத்துவது வழக்கம். இவர்கள், வாக்குப்பதிவு வரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் வாகன ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அப்போது, விதிமுறைகளை மீறி வாகனங்களில் பணம் எடுத்து வருபவர்கள் மற்றும் பரிசு பொருட்களை எடுத்து வருபவர்களை கண்டறிந்து அதனை பறிமுதல் செய்வர்.

Related Stories: