சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கொடநாடு காட்சி முனையில் வாகன நிறுத்துமிடம் விரிவாக்கம்

 

கோத்தகிரி,மார்ச்11: கோத்தகிரியில் உள்ள கொடநாடு காட்சி முனைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்கேற்ப வாகன நிறுத்துமிடம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. மேலும் அங்கு சுற்றுலா பயணிகள் அமர்ந்து இயற்கை அழகை ரசிக்க நாற்காலிகள் அமைத்தல், தூய்மைப்படுத்துதல் போன்ற பணிகளும் நடக்கின்றன.  நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று கோத்தகிரி அருகே உள்ள ெகாடநாடு காட்சி முனை ஆகும். இந்த காட்சி முனை கோத்தகிரியில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்துவிட்டு சமவெளி பகுதிகளுக்கு செல்லும்போது கோத்தகிரி வழியாக ெகாடநாடு காட்சி முனைக்கு சென்று இயற்கை அழகை கண்டு ரசித்து செல்வர்.

Related Stories: