வாளையார் பகுதியில் வன விலங்குகள் ஊருக்குள் புகாமல் தடுக்க ரூ.92 லட்சத்தில் சோலார் பேனல் வேலி

பாலக்காடு,மார்ச்3: பாலக்காடு மாவட்ட வனத்துறை அலுவலர்கள் குடியிருப்பை வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீதரன் திறந்து வைத்தார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட வனத்துறை அலுவலகம் அருகே வனத்துறை அலுவலர்களுக்கான நவீன வசதிகளுடன் கூடிய குடியிருப்புகளை திருவனந்த புரத்தில் இருந்தபடி வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீதரன் காணொலிக்காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில்: வனவிலங்குகளின் பாதுகாப்புகள் ஏற்படுத்தவும், மனித விலங்கு மோதல் ஆகியவை தடைப்படுத்தவும் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக நபார்டு உதவியுடன் ரூ.2.99 கோடியில் அதிநவீன வசதிகளுடன் பேரிடர் மீட்புக்குழு படையினர் கட்டிடம், கால்நடை மருத்துவமனை, பிரேத பரிசோதனை அறை,குடியிருப்பு முழுமைப்பெற செய்துள்ளன. இதன் திறப்புவிழா விரைவில் நடைபெறவுள்ளது. ரூ.47 லட்சம் மதிப்பில் வாளையார் வனச்சரக அலுவலகம் அமைக்கப்படவுள்ளது.

வனவிலங்குகள் மக்கள் வசிக்கின்ற பகுதிகளுக்கு வராமல் தடுக்க ஒலவக்கோடு,வாளையார் ரேஞ்சுகளில் நபார்டு உதவியுடன் ரூ.92 லட்சம் மதிப்பில் சோலார் பேனல் வேலிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு வனத்துறை அமைச்சர் பேசினார். மலம்புழா எம்.எல்.ஏ.,பிரபாகரன் தலைமை தாங்கி கட்டிட அறைகளை திறந்து வைத்தார்.

பாலக்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலம்புழா பிளாக் பஞ்சாயத்துத் தலைவர் கிருஷ்ணன்குட்டி,வனத்துறை தலைமை அதிகாரி விஜயநாதன், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், வனத்துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Related Stories: