குருவாயூர் கோயில் திருவிழா குடிநீரை விவசாயத்திற்கு பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை

 

ஊட்டி, மார்ச் 10: குடிநீர் கிணற்றை விவசாயத்திற்கு பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெரியார் நகர் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். ஊட்டி அருகேயுள்ள இத்தலார் பெரியார் நகர் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, இத்தலார் ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு குடிநீர் பற்றாக்குறையின் காரணமாக 2023-24ம் ஆண்டு சுமார்  ரூ.14 லட்சம் செலவில் கிணறு மற்றும் பம்ப் அறை ஆகியவை ஊராட்சி ஒன்றியம் சார்பில் அமைத்து கொடுக்கப்பட்டது. அதன்பின், எங்களுக்கு தேவையான குடிநீர் கிடைத்து வந்தது.

Related Stories: